குறுங்கதை : சிங்கப் பெண்ணே
அரங்கமே அமைதியில் சூழ்ந்த நிலையில் களமிறங்கிய மாணவிகள் அவர்தம் ஓடும் பாதையில் வேட்டைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நானூறு மீட்டர். கால்கள் ஓரிடத்தில் நிலைப்பெற முடியாத நிலையில் கைவிரல்களும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு நிலைக்குத்திக் கிடந்தன. வியர்வை துளிகள் முகத்திலிருந்து கழுத்திலறங்கி நெஞ்சுக்குழியில் நீரோட ஆரம்பித்ததும் சற்று நினைவு திரும்பியவனாய் விழியின் ஓரமாய் மாலினியைப் பார்த்தேன். அவள் எந்தவொரு சலனமுமின்றி காணப்பட்டாள். நான் கவனித்தை உணர்ந்தவளாய் தன் காந்தப் பார்வையால் என்னை நோக்கினாள். அவள் கண்களையே பார்த்தேன். "என்னங்க சார், நான் உங்க பொண்ணு. மனசுல படபடப்பு வேணாம். போய் ரீலேக்சா உட்காருங்க..." மாலினி உள்ளத்துணர்வுகளை விழியால் மீட்டுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. சுங்கை தெப்பி தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த நாளன்று "வணக்கம் சார்" என்று லாரன்ஸ் மாஸ்டர் பாணியில் முதல் வணக்கத்திலே என் முதல் குழுந்தையுமானாள் மாலினி. நான் ஓய்வாகும் வேளையில் மாணவர்கள் திடலி...
கருத்துகள்
கருத்துரையிடுக