இடுகைகள்

கவிதை : அந்தரங்கம் விற்பனைக்கல்ல

    வெற்றுக் காகிதத்தை வெறுமனமே கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் மழை வீழ்ச்சியின் சூட்சமம் பிளந்து கிடந்த பூமியின் வெப்பம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது வியர்வைத் துளிகள் ஓயாமல் மார்பின் வழியே தேங்கிக் கிடக்கின்றன .   என் மௌனத்தின் அடர்த்தியை களைத்துவிட்ட பதிகளுக்கு கிழிக்கப்பட்ட என் உணர்வுகள் தெருவில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கிற்கு ஒப்பற்றவையாகும் .   மரண வாக்குமூலம் தர மறுக்கின்றன என் விரல்கள் புத்துயிர் பெற்ற என் எழுத்தை சிறைக்கைதியாக்க விருப்பமில்லை புகழின் உச்சியில் காதல் தந்த பலவீனம் சூழ்ச்சியின் பலம் .   இந்த இரவோடு இதை மறக்க வேண்டும் . நாளைய விடியலில் மீளமுடியாத கனவுகள் வலுவிழக்கும் .   வஞ்சகனின் முடிவிலிருந்து முடிவுறுவது கடினம்தான் விரல்களின் இடுக்களிலிருந்து என் தூவலின் கூர்மை உலகை ஆளச் செய்யும் எழுச்சியின் உற்சாக வார்த்தைகள் என் செவிகளில் ஒலித்துக் கோண்டே இருக்கும் .   ஆழ்ந்த குற்றவுணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் பெண் எழுத்தாளர் வீட்டு முகவரியில் பொரிக்க

குறுங்கதை : இருமுனை

படம்
இரவெல்லாம் அவளுக்குத் தூக்கமில்லை. அம்மாவைப் பார்த்தாள். குறட்டை பலமாக இருந்தது. அம்மாவின் குறட்டையைப் பற்றி அவளுக்குத் தெரியும். படுக்கையை விட்டு எழுந்தாள். மனத்திற்குள் பயம் சூழ்ந்திருந்தது. இருட்டாக இருந்த அறையில் கதவின் கீழ்ப்பகுதியில் மட்டுமே வெளிச்சம் கொஞ்சம் மீட்டிருந்தது. அந்த சிறிய பாததங்களின் ஓசை தாயின் காதிற்குக் கேட்கப் போவதில்லை. நான்கு கால் பிராணியாகவே மாறிவிட்டாள். பதுங்கி பதுங்கி நகர்ந்து கதவு வரை வந்து சுவற்றைத் தடவி கதவின் பிடியில் கையை நகர்த்திக் கொண்டாள் அவள். மீண்டும் திரும்பித் தாயை ஒரு முறை நோக்கினாள். இருண்ட திசையில் குறட்டை ஒலி மட்டுமே தாயின் நிலையை உறுதிப்படுத்தியது. பெருமூச்சு விட்டபோது வீட்டின் மணி பன்னிரண்டானதைக் காட்டிக் கொடுத்த வேளை அவளது கண்களில் பயம் சூழந்து கொண்டது. படுக்கைக்குத் திரும்பிய வெடவெடத்த கால்கள் அதிவேகமாக கதவைத் திறந்து கொண்டு தன் புத்தகப்பையைத் தேடியது. கணிதப் பாட நூலில் ஒளித்து வைத்திருந்த வாழ்த்தட்டையை எடுத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்குத் திரும்பி தலையணையின் கீழ் சொருகிக் கொண்டாள் அவள். இருளில் ஈரமாகிப் போகும் அவளது படுக்கை இன்று க

குறுங்கதை: சித்து

படம்
கழுத்தில் ஒரே இடத்தில் அடுத்தடுத்தாற் போல் மூன்று ஆழமான காயங்கள். கூர்மையான ஆயுதமாக இருந்திருக்கக் கூடும். மூன்று இஞ்ச் ஆழம் போல். மேலோட்டமான பார்வையில் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆயுதத்தின் சுற்றளவு பத்து சென் அளவிற்காகவாவது இருந்திருக்க வேண்டும். ஆனால், இரத்த கறை இல்லை. இரத்தம் தெறித்தற்கான அடையாளமுமில்லை. அவ்விடத்தில் ஆயுதம் ஏதும் சிக்கவுமில்லை. கை ஜாடை காட்டி மீண்டும் அந்தப் பெண்மணியை அழைத்தேன். மீண்டும் மீண்டும் அதையே ஒப்புவித்தாள். அவளது கண்களை, வாயின் அசைவை உற்று நோக்கினேன். “…நா…நா..நான் போறப்ப நாக்காலி விழுந்த சத்தம் கேட்டது…திரும்பி வரப்ப காலு அந்தரத்தில ஆடிக்கிட்டு ….” வாயடைத்துப் போன அந்தப் பெண்மணி அருகிலிருந்த ஆடவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். உடலின் நடுக்கத்தைத் தவிர்க்க அந்த ஆடவன் அவளை அணைத்துக் கொண்டான். கழுத்துக்குக் கீழே கயிற்றின் இறுக்கம் கருமையான அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. சன்னல்கள் சிறு கம்பிகளால் ஆனது. வாசற்கதவு உடைப்படவும் இல்லை. வீட்டில் அன்று உறவினர்கள் வருகை வேறு. வரவேற்பறைக்கு நுழைய மூன்று படிக்கட்டுகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

குறுங்கதை: அவள் கவனிக்கப்படுகிறாள்

படம்
தொ டர் வண்டியில் ஏறி அமர்ந்தவள் இன்னுமும் நூலை எடுத்து வாசிக்கவில்லை. மனம் அவளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள். தொடர் வண்டி பயணத்தில் அவளுக்கு விருப்பமான ஒன்று வாசிப்பு தான். அமைதியான சூழலில் எந்தவொரு தொந்தரவுமின்றி வாசிக்கத் துவங்கி விடுவாள். இயற்கை காற்றுக்கு வழியில்லாத கண்ணாடிகளின் வழி வெளியுலத்தை இரசித்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பாள். முதல் பக்கத்தைத் தொடர்ந்து அடுத்த பக்கத்தைத் திருப்ப விரல்கள் முனையும் முன்னரே கண்கள் கண்ணாடிக்கு அப்பால் சென்று விடும். தொடர் வண்டி பயணத்தில் இரசிக்கும் அந்த ஆற்று நீர் ஒரு முறை கூட வற்றியதாக அவளுக்குத் தோன்றியதில்லை. சர்ரென்று கடந்து விடும் அந்த நொடிப் பொழுதிலும் ஆற்று நீர் கடந்த கால, மறந்து போன ,தொலைந்து போன இடப்பெயர்ச்சியை நினைவுறுத்தி விடும். பெரிய ஆற்றுக்கு அருகிலிருந்த அவளது பிறப்பிடம் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும். ஆனாலும்,அவள் ஆற்றை வெறுத்ததில்லை. சிறுவர் வயதில் கழுத்தளவு நீரில் இறங்கி இரு கைகளாலும் தண்ணீரை அடித்து தெரிக்கும் நீர்த்துளிகளில் கண்களை மூடி முகத்தை நனைத்துக் கொள்வதில் பேரானந்தம்.

குறுங்கதை : ஒரு நொடிக்குள்

இன்று எனக்குள் ஏற்பட்ட இந்த உணர்வு மனத்தை மிக பலவீனமாக்கி விட்டிருந்தது. சிவந்த நிறத்திலிருந்த உள்ளங்கைகளில் நடுக்கம் மிகுதியிருந்தது. உள்ளங்கைகளில் படிந்திருந்த இரத்தக் கறையை துடைக்க முடியவில்லை. கைகள் இரண்டும் அந்தரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே இறுகிப் போயிருந்தது. கணம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. விரல்கள் விரித்துக் கொண்டிருந்தன. ஒரு விரலுக்கும் மற்றொரு விரலுக்கும் போதுமான இடைவெளிகள். விரல்கள் நடுக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கைகளின் தசைகளில் நடுக்கம் இருப்பதை உணர முடியவில்லை. தோள் பட்டை கைகளின் தசைகளை இறுக்கிக் கொண்டிருந்தன. தலை கிறுகிறுத்துப் போயிருந்தது. உச்சந்தலையிலிருந்து வியர்வைத் துளிகள் கழுத்து வரை நீரோட்டமாக இருந்தது. சுற்றி கறுப்பர் கூட்டம். உருவங்களாக தென்பட்டன. கண்கள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இருண்ட பாதையில் வாகனங்களின் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. சம்மாங்காலிட்டு உட்கார்ந்திருந்ததில் கால்கள் மறுத்துப் போயிருந்தன. புதிய தார் ஊற்றி இரண்டே நாள்கள் ஆன பாதையிது. உடலில் ஏற்பட்டு சிலிர்வுக்கு ஒத்து போனது.. தூரத்தே நான்கு கால்கள் மட்டும் சற்று மங்கலா

குறுங்கதை : சொல்லி மகிழும் பொய்கள்

படம்
“ இல்லைங்க சாரு… மவன் ஓத்துக்கிக்க மாட்டான்…அவன் சிங்கப்பூருல இருக்கான்…நான் அவன்கிட்ட பேச முடியாது….ஏசுவான்….” இடுப்பில் சொருகி வைத்திருந்த நெகிழிப் பையிலிருந்த வெற்றிலை எடுத்து நுனிக் காம்பைக் கிள்ளி திண்ணையின் அருகே வீசினாள் ருக்கு பாட்டி. ஏற்கனவே அங்கு நான்கைந்து காய்ந்துப் போன காம்புகள் ஆங்காங்கே தெரித்துக் கிடந்தன. என் கண்கள் காம்புகளை நோக்கிய மறுகணமே ருக்கு பாட்டியை மீண்டும் பார்த்தது. “…ம்மா…மருமக கிட்ட…” பாட்டியின் கண்கள் அனல் தெரித்த மாதிரி உள்ளிருந்த சதைகள் வெளியே பிதுக்கிக் கொண்டு “ ஏயா….அவகிட்ட வாயைத் கொடுத்து அவ அனுப்புற காசுல கைய வக்க சொல்றீங்களா…” வெத்தலையை கட்டியிருந்த கைலியில் ஒருமுறை துடைத்து அதில் சுண்ணாம்பு , பாக்கை வைத்து மடித்தாள். “ ஐயா, நா வெறும் பொம்மதான்….என்கிட்ட பேசி என்ன செய்ய முடியும்…” காலையிலிருந்து நான் நான்காவது வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கேன். கண்ணுக்கு எட்டிய தூரமுள்ள அந்தப் பள்ளி என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆறாக இருந்த வகுப்பறைகள் நான்காக உருவான நாளிலிருந்து என் கால்கள் ஓய்ந்தப் பாடில்லை. அலைச்சல்கள் அதிகம். பே

சிறுகதை : சகாப்தம்

படம்
இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக உள்ளுணர்வுகள் உரைத்துக் கொண்டே இருந்தன. பல உயிர்கள் துச்சமாக எண்ணிக் கொல்லப்ப்படுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒரு துளி விந்துவினால் உயிர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது கருவாகி உருவெடுத்து உலகத்தை வியந்து பார்க்கையில், தனக்கான உலக வாழ்க்கையில் ஊர்ந்து கிடக்கையில், சம மனிதர்களுடன் சிந்தையில் கலந்து உணர்வில் உறைந்து போய்க் கொண்டிருக்கையில் உயிரைப் புசித்து வாழும் வாழ்க்கை முறையானது எங்கிருந்துதான் முளைத்துக் கொண்டது? என் வெள்ளுடையாடையில் ஆங்காங்கே கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளின் உச்சத்தை சகித்து வாழ நான் உணர்வற்ற ஜடமாகியிருக்க வேண்டும். என் மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும். நானோ வாயடைத்து அல்லவா நின்றிருந்தேன். எங்கோ ஒரு மூலையில் மனித ஓலத்தை கட்டாயப்படுத்தியிருந்த ஜப்பான் சிப்பாய்களின் ஆயுதங்கள் முடக்கிவிடப்பட்டிருக்க வேண்டும். சதைகளை மிதித்து மிதித்து வலு சேர்த்துக் கொண்ட அந்த பூட்ஸ் காலணிகளின் ஓசைகள் என் செவிகளுக்கு அதிகமாக கேட்கின்றன. அவை ஆணவத்தின் அராஜமாக அல்ல, பயத்தில் தெரித்தோடும் வேகத்தின் தொனிகளாக. என் காதுகளைச் சதா கிழித்துக் கொண